தவெக தலைவர் விஜய், சமீபத்தில் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுடன் பேரவையில் நெருக்கம் காட்டி பேசியதை அடுத்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் N. ஆனந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, புதிதாக இணைந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக உணரும் அவர், “பேசாமல் ரசிகர் மன்றத் தலைவராகவே தொடர்ந்திருக்கலாம்” என்று தனது நெருங்கிய வட்டாரங்களிடம் வேதனையைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தலைமை தன்னைவிட்டு விலகிச் செல்வதாக அவர் கருதுவது, தவெகவின் உட்கட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
