தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல கட்சியினர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர். திமுகவை பொருத்தவரை அடுத்த முறையும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் உறுதியாக உள்ளனர். இம்முறை 200 தொகுதிகளில் வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திமுகவின் மூத்த அமைச்சர் கே.என்.நேரு திமுக ஆலோசனை கூட்டத்தில் பேசியது, “நான் 30 ஆண்டுகாலம் திமுகவில் மாவட்ட செயலாளராக செயலாற்றுகிறேன். ஆனால் ஒரே ஒருவரை கூட நான் கட்சியிலிருந்து நீக்கியது இல்லை. ஒன்றிய செயலாளர்களுக்காக நான் காவல் துறையினரிடம் சண்டை போட்டு மீண்டும் அவர்களை கொண்டு வந்துள்ளேன். தயவுசெய்து ஒன்றிய செயலாளர்கள் தங்களின் பணியை சரியாக செய்யுங்கள். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க இல்ல…. நீங்க என்ன செஞ்சீங்க… என்று கேட்டால், அதெல்லாம் சரிதான், நாங்கள் பதில் சொல்ல தயாராக உள்ளோம். கழகச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ஒரு விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். எங்களால் செயல்பட முடியவில்லை, என்று நீங்கள் சொல்லிவிட்டால், நாங்கள் வேறு ஆள் போட்டு அதை செய்து கொள்கிறோம். அதில் ஒரு மாற்றம் கிடையாது. ஏனென்றால் சரியாக வேலை செய்யாதவர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய இயலாது” என்று தெரிவித்தார்.
அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…
கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…
பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…
சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…
90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள்…
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…