திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. மேம்பாலச் சுவரில் மோதிய மினி வேன்… 2 பெண்கள் துடிதுடிக்கப் பலி..!

By Nanthini on தை 19, 2026

Spread the love

திருநெல்வேலியிலிருந்து பொள்ளாச்சி நோக்கி 11 கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினி வேன் ஒன்று, விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன், அங்கிருந்த மேம்பாலத்தின் தடுப்புச்சுவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இது குறித்து மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.