“மறைக்கப்படும் உண்மைகள்” ஈரானிடம் சிக்கிய அமெரிக்கா… காலியாகும் ஏவுகணைக் கிடங்குகள்… பகீர் தகவலை வெளியிட்ட துணை அதிபர் வேன்ஸ்..!!

By Soundarya on சித்திரை 30, 2026

Spread the love

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பென்டகனின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் எழுப்பியுள்ள சந்தேகங்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரானின் ராணுவத் திறன் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் தகவல்கள் தவறானவை என்று வான்ஸ் கருதுவதுடன், பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் பென்டகன் தரப்பிலிருந்து வழங்கப்படும் அறிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

குறிப்பாக, ஈரான் உடனான தொடர் மோதல்களால் அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்பு வேகமாகத் தீர்ந்து வருவதாக வான்ஸ் கவலை தெரிவித்துள்ளார். இது எதிர்காலத்தில் மற்ற நாடுகளுடனான மோதல்களின் போது அமெரிக்காவின் பாதுகாப்புத் திறனைப் பெருமளவு பாதிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் மட்டத்திலேயே ஏற்பட்டுள்ள இந்த பிளவு, வான்ஸ் மற்றும் பென்டகன் இடையேயான பனிப்போரைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.