#image_title
தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள் கன்னடத்துப் பைங்கிளி என்று சொல்லி அழைத்து கொண்டாடினர். இவர் தமிழில் 1957ஆம் ஆண்டு வெளியான தங்கமலை ரகசியம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்த நிலையில் முன்னணி நடிகையானார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி, முத்துராமன் என பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை சரோஜா தேவி. தமிழில் மட்டுமே 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
சினிமாவில் தன்னுடைய உச்சகட்டத்தில் இருக்கும்போதே ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் திருமணத்துக்குப் பிறகு சரோஜா தேவி சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கர்நாடகாவில் செட்டில் ஆனார்.
எம் ஜி ஆரின் ஆஸ்தான கதாநாயகியாக இருந்த சரோஜா தேவி அவரோடு பல படங்களில் இணைந்து நடித்தார். அப்படி அவர்கள் இணைந்து நடித்த ஒரு படம்தான் தெய்வப்பிறவி. இந்த படத்தில் அவர் நடித்த போது சிவாஜியோடு புதிய பறவை படத்திலும் நடித்து வந்துள்ளார். அப்படி நடித்துக்கொண்டு இருக்கும் ஒருநாள் ஷூட்டிங்குக்கு வராமல் புதிய பறவை ஷூட்டிங்கில் இருந்துள்ளார். இது எம்ஜிஆருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும் வேறுவழியில்லாமல் அவர் வரும் வரை காத்திருந்து பின்னர் நடித்தாராம். ஆனால் அதற்குள் எம்ஜிஆர், சரோஜா தேவி மேல் கோபத்தில் இருப்பதாகவும், அதனால் இனிமேல் அவரை தன் படத்தில் ஒப்பந்தம் செய்யமாட்டார் என்றும் வதந்தி சினிமா வட்டாரத்தில் பரவ ஆரம்பித்து, எம் ஜி ஆர் ரசிகர்களிடமும் பரவியது.
இதனால் இந்த கூட்டணி பிரியப் போகிறார்களே என எம்ஜிஆர் ரசிகர்கள் “இதுதான் கடைசி படம்” எனப் படத்தை ரிப்பீட் மோடில் பார்த்துள்ளனர். இதனால் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. ஆனால் அதன் பின்னரும் அவர்கள் இணைந்து நடித்தனர். ஒரு வதந்தி கூட ஒரு படம் ஹிட் ஆக சிறிய அளவில் பயன்பட்டுள்ளது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…