Categories: சினிமா

அது என்ன அவருக்கு மட்டும் ரெண்டு மைக் வைக்குறீங்க்க … கோபித்துக் கொண்ட நம்பியார்- MGR கொடுத்த பதிலால் அரங்கில் பரவிய சிரிப்பலை!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால் படங்களில் அவர் வைத்ததுதான் சட்டம். அவர் படத்தில் யார் யார் நடிக்க வேண்டும், யார் பாடல் எழுத வேண்டும், பாடலுக்கான மெட்டு எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் அவர்தான் முடிவு செய்வார்.

அதே போல எந்தவொரு கூட்டத்திலும் தனக்கென்று ஒரு தனிமரியாதை இருக்கவேண்டும், தான் தனித்துத் தெரியவேண்டும் எனப் பார்த்துக்கொள்வார். அரசியலுக்கு வந்த பின்னும், அதற்கு முன்பும் கூட அவர் இந்த இமேஜை தக்கவைத்துக் கொண்டார்.

ஒரு கூட்டத்தில் எம்ஜிஆர் பேசுகிறார் என்றால் அவர்தான் கடைசியாக பேசுவார். அதுதான் தனக்களிக்கப்படும் முக்கியத்துவம் என அவர் கருதுவார். அப்படி ஒரு மேடையில் நடந்த ருசிகரமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.

எம்ஜிஆரின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது எங்க வீட்டுப் பிள்ளை. அந்த படத்தின் வெற்றிவிழாவின் போது கலைஞர்கள் அனைவரும் கலந்துகொண்டு பேசியுள்ளனர். கடைசியாக எம் ஜி ஆர் பேச வந்த போது அவரது குரல் கடைசி வரிசையில் இருப்போருக்கும் கேட்கவேண்டும் என்பதற்காக இரண்டு மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன.

#image_title

இதைக் கவனித்த அந்த படத்தின் வில்லன் நடிகர் நம்பியார் “இது அநியாயம்… நாங்க பேசும்போது ஒரு மைக் மட்டும் வச்சீங்க. எம்.ஜி.ஆர் பேசுவதற்கு மட்டும் இரண்டு மைக்குகளா” என செல்லமாக கோபித்துக்கு கொண்டு கேட்டுள்ளார். இதை சிரித்துக் கொண்டே கேட்ட எம் ஜி ஆர் அவருக்கு சொன்ன பதில் கூட்டத்தாரை சிரிக்க வைத்துள்ளது.

அப்போது எம் ஜி ஆர், நம்பியாருக்கு பதிலளிக்கும் விதமாக “‘படத்தில் எனக்குத்தான் இரட்டை வேடம். அதனால்தான், இரண்டு மைக் எனக்கு வச்சிருக்காங்க” எனக் கூற சிரிப்பலை பரவி கைத்தட்டும், விசிலும் பறந்தனவாம். எம்ஜிஆரின் இந்த பதிலைக் கேட்டு நம்பியாரே வாய்விட்டு சிரித்தாராம்.

vinoth

Recent Posts

கதவைத் திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி… பெற்ற மகன் கண்முன்னே மனைவியின் கொடூர வெறிச்செயல்…!

தெலுங்கானா மாநிலம் மஹபூப்நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் மனைவியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

மாமியார் காரியத்திற்கு வந்த இடத்தில் மருமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… தண்ணீருக்குள் மறைந்திருந்த எமன்… நொடி பொழுதில் நடந்த கொடூரம்…!

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற வாலிபர், அண்மையில் காலமான தனது மாமியார்…

3 minutes ago

அச்சோ.. செம ப்ரோபோசல்… மீட்புப் பணி என்று நினைத்த காதலிக்கு… இன்ப அதிர்ச்சி கொடுத்த நியூயார்க் தீயணைப்பு வீரர்…!!

நியூயார்க்கில் தீயணைப்பு வீரராகப் பயிற்சி பெற்று வரும் ஒரு நபர், தனது காதலிக்கு மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில்…

9 minutes ago

மனைவியை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் கட்டிய கணவன்… நள்ளிரவு 11 மணிக்கு வீட்டில் நடந்த பயங்கரம்… பதறவைக்கும் கொடூரக் கொலை…!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ராஜக்கல் கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (டிரைவர்). இவருக்கும் தனலட்சுமி என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு…

13 minutes ago

மோடியின் மெகா ஸ்கெட்ச்… டெல்லிக்கு பறந்த அந்த சீக்ரெட் ரிப்போர்ட்… தூக்கத்தை இழந்த 10 அமைச்சர்கள்… பாஜகவில் அதிரடி திருப்பம்…!

மத்திய அமைச்சரவையை அதிரடியாக மாற்றிமைக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. இதன்படி, 10-க்கும் மேற்பட்ட…

20 minutes ago

திருமணமான 9-வது நாளே நேர்ந்த கொடூரம்… தேனிலவில் புதுப்பெண்ணுக்கு கணவன் செய்த காரியம்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகப் புதுப்பெண்…

25 minutes ago