Connect with us

இப்படி ஒரு கல்நெஞ்சகாரரா?… சக நடிகரின் சாவுக்கு கூட போகாத வடிவேலு.. நேரலையில் உண்மை முகத்தை கிழித்த பிரபல நடிகர்..!!

CINEMA

இப்படி ஒரு கல்நெஞ்சகாரரா?… சக நடிகரின் சாவுக்கு கூட போகாத வடிவேலு.. நேரலையில் உண்மை முகத்தை கிழித்த பிரபல நடிகர்..!!

 

தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த நடிகர் என்றால் அது வடிவேலு தான். இவர் மக்கள் நெஞ்சில் காமெடியில் இடம் பிடித்திருந்த நிலையில் இறுதியாக மாமன்னன் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் வடிவேலு செயல் குறித்து தற்போது பிரபல நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சப்போர்ட்டிங் ரோடிலும் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மீசை ராஜேந்திரன்.

   

இவர் வடிவேலுவுடன் இணைந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு சக நடிகராக வடிவேலு குறித்து இவர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சினிமாவில் தித்திக்க தித்திக்க பேசி பழகும் வடிவேலோ சக நடிகர்களின் வளர்ச்சியை பிடிக்காமல் தன்னுடைய உதவியை எதிர்பார்க்கும் அளவுக்கு இருப்பவர்களை தான் தன்னிடம் வைத்திருப்பார். அவரை சற்று எதிர்த்து பேசினால் இனி நீ வேலைக்காக மாட்டாய் எனக் கூறி திருப்பி அனுப்பி விடுவார். பார்ப்பவர்கள் இவரா இது என்று கேட்கும் அளவிற்கு வெளியேஷம் போடுவதில் வடிவேலு வல்லவர்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடன் பயணித்த பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கின் வளர்ச்சியை பிடிக்காமல் அவர் இறப்புக்கு பின் அவருடைய சாவுக்கு கூட செல்லாத கொடுமைக்காரராக வடிவேலு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஊரே போற்றிய மயில்சாமியின் மரணத்திற்கும் அவர் போகவில்லை. இறுதியாக இருந்த மனோபாலாவின் இறப்புக்கு கூட வடிவேலு செல்லவில்லை. என்னதான் பகையாக இருந்தாலும் ஒரு சக நடிகரின் மரணத்திற்கு கூட போகாத இவரெல்லாம் ஒரு மனிதனாய் என மீசை ராஜேந்திரன் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading
To Top