தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 41 கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) நிரப்ப உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எழுத்துத் தேர்வும், நேர்காணலும் கிடையாது. விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.67,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அத்துடன் மருத்துவ ஆய்வகத் தொழில் நுட்பத்தில் ஓராண்டு அனுபவம் பெற்றிருப்பதும் அவசியம். விண்ணப்பிக்கும் குறைந்தபட்ச வயது 18 ஆகும். (பட்டியலின, பழங்குடியினர், பிசி போன்ற சில பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.)
தகுதியுள்ளவர்கள் mrb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப் பிரிவினர் ரூ.600-ம், மற்ற பிரிவினர் ரூ.300-ம் செலுத்த வேண்டும். இந்தக் கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 29 ஆகும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…