BREAKING: வங்கி கணக்கில் பணம்… சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்… அதிகாரிகளுக்கு பறந்த அவசர உத்தரவு….!

By Nanthini on ஆடி 11, 2026

Spread the love

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள காப்பீட்டு விண்ணப்பப் பணிகளை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்று கருவூலத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ அனைத்து மாவட்டக் கருவூல அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த பணிகளுக்கான காலக்கெடு எக்காரணம் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அரசின் இந்த அதிரடி மற்றும் கண்டிப்பான உத்தரவின் மூலம், மருத்துவச் செலவுகளைச் செய்துவிட்டு காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் நீண்ட நாட்களாக தவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், முதியோர்களான ஓய்வூதியதாரர்களும் பெரும் நிம்மதியும், நேரடிப் பலனும் அடைவர் என்பதில் ஐயமில்லை.