தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக பாஜகவை சந்தித்துள்ளது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா இடையே மோதல் நிலவியது. வைகோவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்லை சத்யா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார்.
இதனிடையே பாஜக கூட்டணி தொடர்பாக வைகோ, துரை வைகோ இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஜக எம்பி-களே அவ்வளவு எளிதாக மூடியை சந்தித்து விட முடியாது எனக் கூறப்படும் நிலையில், கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் துறை வைகோ இரண்டு முறை மோடியை சந்தித்துள்ளார். பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என வைகோ அறிவித்த நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. பாமகவை போல மதிமுகவிலும் தந்தை – மகன் மோதல் ஏற்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
