என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு ஜெயலலிதாவை சந்தித்தது தான் என்று வைகோ பேசியுள்ளார். சென்னை பூந்தமல்லியில் மண்டல மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வைகோ, என் உயிரை தியாகம் செய்கிறேன். ஆனால் சிலர் மதிமுக கட்சி இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள். இந்த கட்சியை அழிக்க முயற்சிக்கிறார்கள். எத்தனை நெருக்கடிகள், எத்தனை துரோகங்கள் அத்தனைக்கும் மத்தியில் தான் நான் 31 ஆண்டுகளாக இந்த கட்சியை கட்டி பாதுகாத்து வருகின்றேன்.
ஒருமுறை கடலில் விழுந்த போது காப்பாற்றினார். மற்ற இரண்டு முறை எப்போது காப்பாற்றினார்? மல்லை சத்யாவுக்கு வைகோ கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய வைகோ, திருச்சி திமுக மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. திமுக கூட்டணியில் தான் நாங்கள் எந்த சூழலிலும் நீடிப்போம். திமுக கூட்டணிக்கு வெற்றிக்காக பாடுபடுவோம். இதுவே என் கட்டளை என்று வைகோ தெரிவித்துள்ள.
