நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக இருக்கும் சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு மற்றும் அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். அதனைப் போலவே கிரகங்களின் ராஜாவாக இருக்கும் சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம் மற்றும் அரசு வேலை ஆகியவற்றின் காரணியாக உள்ளார். இந்நிலையில் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த சுக்ராதித்யா ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் மகர ராசியில் உருவாக இருப்பதால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகிறார்கள்.
துலாம்:
இந்த ராசிக்காரர்களுக்கு வசதியும் ஆடம்பரமும் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலை அல்லது தொழிலில் வெற்றி கிடைக்கும். நிறைய லாபமும் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். தாயுடனான உறவு இனிமையாக இருக்கும். பல வழிகளில் பணம் உங்களைத் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
தனுசு:
எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலதிபர்கள் லாபத்தை பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக மாறும். மன நிலையும் மேம்படும். உங்களுடைய பேச்சால் பல வேலைகளை வெற்றிக்கனமாக முடிப்பீர்கள்.
மீனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியாற்றும் இடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகளும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும்.
