திருமணத்தில் பெண்ணுக்கு ஆண் தாலி கட்டும் நடைமுறைக்கு பின்னால் ஒரு பெரிய அறிவியல் ஆராய்ச்சியை அடங்கியுள்ளது. பெண்களுக்கு மார்பு குழியில் உள்ள நரம்பு முடிச்சு, மூளையில் உள்ள பேசல் ரீஜன் என்ற பகுதியுடன் தொடர்புடைய, 2 நரம்புகள் கொண்ட பாதையாகும். ஆண்களுக்கு மார்பு குழியில் நரம்பு முடிச்சு கிடையாது.
இதனால் ஆணை விட பெண்கள் அதிக ஞாபக சக்தி வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்த அதிக ஞாபக சக்தி பெண்களுக்கு அதிக குழப்பங்களை கொடுக்கும். பெண்கள் ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டு, பின்னர் குழப்பம் அடைவதற்கு இதுவே காரணம். இதனை உணர்ந்த முன்னோர்கள் அதற்கான மருந்தையும் அன்றே கண்டுபிடித்தனர்.
அதுதான் தங்கம். தங்கத்தினாலான தாலியை எப்பொழுதும் பெண்கள் மார்பு குழியில் உரசும் பொழுது, பல நன்மைகளை விளைவிக்கும். இதை அறிந்த முன்னோர்கள், தாலி கட்டும் முறையை கொண்டு வந்தனர். இது சரியாக மார்பு குழியில் வரவேண்டும் என்பதற்காக மூன்று முடிச்சுகள் போடப்பட்டு, அந்த முடிச்சிற்கு உறவுகள் சார்ந்த பாசத்தை கொடுத்து, விளக்கம் அளிக்கப்பட்டது.
