“அவர் என் புருஷன் இல்ல”… திருமண மேடையில் நடந்த பகீர் மோசடி.. புகுந்த வீட்டில் மாறி மாறி சீரழிக்கப்பட்ட புதுமணப்பெண்…. ராஜஸ்தானை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on ஆனி 29, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மர் மாவட்டம் பொக்ரான் பகுதியில், புகைப்படத்தை மாற்றி காட்டி ஏமாற்றி, மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டு, பின்னர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட புதுமணப்பெண்ணின் அவலநிலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபால்சுந்த் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தபோது, ஒரு ஆணின் புகைப்படம் காட்டப்பட்டு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், திருமண மேடையில் மணமகனுக்குப் பதிலாக மனநலம் பாதிக்கப்பட்ட வேறொரு நபரை நிறுத்தி ஏமாற்றி, வலுக்கட்டாயமாகத் திருமணம் முடித்துள்ளனர். இதனை அறிந்து பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மாமியார் வீட்டாரால் அவர்கள் மிரட்டப்பட்டு, விஷயம் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே அந்தப் பெண், தனது மாமனாரான டாமாராம் ராமுராம், மைத்துனர் எய்டன் ராம் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் மீது கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் கொடூரமான உடல் ரீதியான தாக்குதல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். மேலும், புகுந்த வீட்டுப் பெண்கள் தன்னை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதோடு, பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்ததாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு அந்தப் பெண் வெளியில் யாரிடமும் பேசிவிடக் கூடாது என்பதற்காக, அவரது சொந்தக் குடும்பத்தினர் கூட அவரைச் சந்திக்க அனுமதிக்கப்படாமல் முற்றிலும் சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

   

தொடர் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கடுமையான தாக்குதல்களின் காரணமாக, அந்தப் பெண்ணின் உடல்நிலையும் மனநிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர், முதலில் பல்சுந்த் மருத்துவமனையிலும், பின்னர் தீவிர சிகிச்சைக்காக பொக்ரான் மாவட்ட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, தங்கை படும் துயரத்தை அறிந்த அவரது சகோதரி, கடந்த சனிக்கிழமையன்று பொக்ரான் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார் வீட்டார் மீது முறைப்படி புகார் அளித்துள்ளார்.

   

பொக்ரான் வட்ட அலுவலர் புதாரம் பிஷ்னோயின் வழிகாட்டுதலின்படி, உள்ளூர் காவல் நிலையத்தில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த கொடூரக் குற்றங்கள் அனைத்தும் பார்மர் மாவட்டத்தின் உந்து கிராமத்தில் நடந்திருப்பதால், மேலதிக விசாரணைக்காக இந்த வழக்கு பார்மர் காவல் கண்காணிப்பாளருக்கு முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.