FLASH NEWS: “அமைச்சரவையில் இருந்து மரிய வில்சன் நீக்கம்?”…. காலையிலேயே பெரும் பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

அமைச்சரவையில் இருந்து மரிய வில்சனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், லஞ்சக் குற்றச்சாட்டில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சட்டப்பேரவையில் உரை நிகழ்த்திய மரிய வில்சன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்குத் தான் லஞ்சம் கொடுத்ததாகப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் காரசாரமான விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

சட்ட விதிகளின்படி லஞ்சம் வாங்குவது எந்த அளவிற்கு குற்றமோ, அதே அளவிற்கு லஞ்சம் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றமே என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். பேரவை மன்றத்திலேயே இத்தகைய குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளதால், இதில் சம்பந்தப்பட்ட இருதரப்பினர் மீதும் எவ்விதத் தயக்கமுமின்றி அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாகத் தலையிட்டுத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.