ஜெயலலிதா இருக்கும்போதே சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக வளம் வந்த மனோஜ் பாண்டியன் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலா பொதுச் செயலாளராக வரவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியதில் இவரும் முக்கிய பங்கு வகித்தார். பிறகு ஓபிஎஸ் பக்கம் தாவினார். இபிஎஸ்-க்கு எதிரான இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஓபிஎஸ் தரப்பில் இவர்தான் ஆஜரானார். இந்நிலையில் மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியமாகியுள்ளது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துள்ளது.
