சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜ் வாங்கி இருக்கும் பங்களாவில் ஒரிஜினல் ஓனர் வந்து சத்தம் போடுகிறார். நீங்க நல்ல அவர்கிட்ட ஏமாந்துட்டீங்க அவன் வாடகைக்கு குடியிருந்து வீட்டை வித்துட்டு போயிருக்கான் என்று கூறுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் பங்களா வீட்டின் ஒரிஜினல் ஓனர் வந்து சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். இந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவன் அவன் இப்படித்தான் ஒவ்வொரு ஊரா போய் ஏமாத்திட்டு இருக்கான். நீங்க எப்படி விசாரிக்காமல் வீட்டை வித்தீங்க இது என்னோட வீடு எல்லாரும் முதல்ல இடத்தை காலி பண்ணுங்க எல்லாரும் வெளியே போங்க என்று சத்தம் போடுகிறார்.
உடனே இதை கேட்ட மனோஜ் ஆடிப் போய் நிற்கிறார். ரோகினி மயக்கம் போட்டு விழுகிறார். எல்லோரும் அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்பி விடுகின்றனர். அண்ணாமலை அவரிடம் விசாரிக்கிறார். விஜயா அழுது கொண்டிருக்கிறார். அண்ணாமலை எப்படி சார் நாங்க பணத்தை தொலைச்சிட்டு வந்து கிளம்ப முடியும் எங்க பணத்துக்கு ஒரு வழி தெரியாம நாங்க இங்க இருந்து கிளம்ப மாட்டோம் என்று கூறுகிறார்.
உடனே பங்களா ஓனர் உங்கள எல்லாம் வேற வழியில் தான் ட்ரீட் பண்ணனும் அப்படின்னு பங்களா வீட்டின் ஓனர் போலீசை வர வைக்கிறார். போலீஸ் வந்து அண்ணாமலை மற்றவர்களிடம் பேசுகிறார்கள். சார் அவனுக்கு இதுதான் வேலை ஊரு ஊரா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கான். நாங்களே அவனை தேடிக்கிட்டு இருக்கோம். வீடு சட்டபூர்வமா அவர் பேர்ல இருக்கு. அவர் பேர்ல இருக்கிற வீட்ல நீங்க இருந்துட்டு பிரச்சினை பண்றது நல்லா இல்ல. கம்ப்ளைன்ட் எழுதி கொடுங்க நாங்க பார்க்கிறோம் அப்படின்னு சொல்லிட்டு அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.
அனைவரும் தங்களது வீட்டுக்கு செல்கின்றனர். வீட்டுக்கு சென்றவுடன் அண்ணாமலை மனோஜை நன்றாக திட்டுகிறார். ஏன்டா படிச்சிருக்க எல்லாத்தையும் விசாரிக்க மாட்டியா ஏன் இந்த அவசரம் உனக்கு உன்னுடைய தகுதிக்கு மூன்று கோடிக்கு வீடு வாங்கலாமா சரி வாங்கும் போது விசாரிச்சு வாங்கணும் இல்ல அப்படின்னு திட்டுகிறார். அந்த நேரத்தில் மீனாவும் கூறுகிறார் கோவிலில் வைத்து நிறைகுடம் விழுந்துடுச்சு சகுனம் சரியில்லன்னு நான் அப்பவே ரோகிணி கிட்ட சொன்னேன் என்று கூறுகிறார்.
முத்துவும் நானும் அன்னைக்கே சொன்னல்ல மஞ்ச கலர் போர்டு போட்டு வாடகை கார்ல் அவசர அவசரமாக ஓடுறான் அவனை பிடிக்கிறேன் அப்படின்னு சொன்னேன்ல எங்க நாங்க சொல்றதெல்லாம் இவன் கேட்கிறான் என்று கூறுகிறார். உடனே ரோகினி நாங்களே நொந்து போயிருக்கும் உங்க பேச்சைக் கேட்கலனு சொல்றிங்களே என்று கூறுகிறார். இல்ல அன்னைக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது பிடிச்சிருந்தா இன்னிக்கு நீங்க தொலைச்சிருக்க மாட்டீங்களா என்று கூறுகிறார் முத்து.
உடனே முத்து இத சாக்கா வச்சுக்கிட்டு இன்னும் அப்பாக்கு தர வேண்டிய பணத்தை இவன் தரமாட்டான் நாளை இழுத்துகிட்டு இருப்பான் என்று கூறுகிறார். உடனே அண்ணாமலை அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறார். இனி அடுத்ததாக மனோஜின் லவ்வர் முத்துவிடம் அவங்ககிட்ட பணம் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.