Categories: சினிமா

கஜினி படமே நான் தயாரிக்க வேண்டியது… நான்தான் முருகதாஸ சூர்யாகிட்ட அனுப்பி வச்சேன் – மனோபாலா பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

Spread the love

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படம் கஜினி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த  படம் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

தீனா படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில்  ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தீனா படத்துக்குப் பிறகு அஜித் அசின் கூட்டணியில் முருகதாஸ் மிரட்டல் என்ற படத்தை இயக்க ஒப்பந்தமானார்.

இந்த படத்துக்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து ஷூட்டிங் வரை சென்றது. ஆனால் அப்போது அஜித்துக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ அப்போது முருகதாஸ் அஜித் பக்கம் நிற்காமல், தயாரிப்பாளரின் பக்கம் நின்றுள்ளார். அந்த படத்தில் இருந்து அஜித் விலக, அவருக்கு பதிலாக சூர்யாவை வைத்து கஜினி என்ற பெயரில் இயக்கியுள்ளார். அந்த படமும் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.

அதன் பின்னர் அதே படத்தை இந்தியில் எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டைக் கொடுத்தார் முருகதாஸ். இந்நிலையில் கஜினி படம் பற்றி ஒரு ஆச்சர்யத் தகவலை மறைந்த நடிகரும் இயக்குனருமான மனோபாலா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் “ஏ ஆர் முருகதாஸ் என்னிடம் கொஞ்ச நாள் வேலைப் பார்த்தார். ரமணாவுக்குப் பின்னர் கஜினி படத்துக்காக அவர் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார். அப்போது அந்த படத்தைத் தானே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன். நான்தான் அவரிடம் சூர்யா பிதாமகன் மற்றும் காக்க காக்க ஆகிய படங்கள் வந்தால் பெரிய ஹீரோவாகி விடுவார் என்று சொல்லி  சூர்யாவிடம் அனுப்பி கதை சொல்ல வைத்தேன். அப்படிதான் கஜினி படத்தில் சூர்யா வந்தார். ஆனால் கடைசியில் என்னால் அந்த படத்தை தயாரிக்க முடியாமல் போனது.” எனக் கூறியுள்ளார்.

ஆனால் கடைசியில் மனோ பாலா கஜினி படத்தில் ஒரு முக்கியமான நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago