பிரபல நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார். நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி, மலையாள நடிகை மஞ்சு வாரியர் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. அவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த செயலை திட்டமிட்டு செய்தவர்கள் சுதந்திரமாக வெளியே நடமாடி வருகின்றனர்.
இதில் உரிய நீதி கிடைக்கவில்லை. எனவே சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான நீதி நிலைநாட்டப்படும் என்று கூறினார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, மதிப்பிற்குரிய நீதிமன்றத்தை நான் மதிக்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் முழுமையான நீதி கிடைக்கவில்லை. ஏனென்றால் குற்றம் செய்தவர்கள் மட்டுமே இப்போது தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இதை திட்டமிட்டவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது ஒரு பயமுறுத்தும் உண்மை. அவர்கள் தண்டிக்கப்படும்போதுதான் உயிர் வாழ்வதற்கான நீதி முழுமை அடையும். இது நான் உட்பட சமூகத்தின் காவல்துறை மற்றும் சட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும்.இது அவளுக்கு மட்டுமல்ல, இது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் உரியது. பணியிடத்திலும் தெருக்களிலும் வாழ்க்கையிலும் பயமின்றி தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று அந்த பதிவில் மஞ்சு வாரியர் ஆவேசமாக கூறியிருக்கிறார்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…