தலைமை சொன்ன ஒத்த வார்த்தைக்காக பொறுமையா இருக்கேன்.. இல்லனா நடக்கறதே வேற… வைகோவுக்கு பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர் ..!!

Spread the love

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸாரைப் பற்றி விமர்சித்த கருத்திற்கு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் வைகோ பேசும்போது, காங்கிரஸாரின் “கதர் சட்டைகள் கிழிக்கப்பட்டிருப்பதாக” குறிப்பிட்டிருந்தார். இந்த காட்டமான விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் (X) தளத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தன்னைப் பற்றிய கேள்விகளுக்கும், வைகோவின் விமர்சனத்திற்கும் பதிலளித்த மாணிக்கம் தாகூர், தான் அமைதி காப்பதன் காரணத்தை விளக்கியுள்ளார். “கூட்டணி குறித்துப் பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து, இதைப் பொறுமையுடன் கடந்து போகிறேன்; பயந்து அல்ல அண்ணன் வைகோ” என அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வைகோவின் கருத்திற்குத் தனது எதிர்ப்பை அவர் நாசூக்காகப் பதிவு செய்துள்ளார்.

இந்த மோதல் போக்கு திமுக தலைமையிலான கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நிலவும் இத்தகைய வார்த்தைப் போர், கூட்டணியின் ஒற்றுமையைப் பாதிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் தலைமை தலையிட்டு இந்த விவகாரத்தைச் சுமூகமாக முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Soundarya

Recent Posts

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

54 seconds ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

4 minutes ago

சட்டமன்றத்தில் பரபரப்பு…. “டாஸ்மாக்கில் பார்ட்டி ஃபண்ட்” CM விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை… திமுகவினர் கடும் அமளி…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…

8 minutes ago

நம்ம ஆட்சிக்கு நாள் குறிக்குறாங்க… வெள்ளை அறிக்கை வெளியானதில் இருந்தே… CM விஜய் கொடுத்த ஷாக்… ஆடிப்போன எதிர்க்கட்சி..!!

"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…

11 minutes ago

FLASH: “கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் அவ்வளவு வலி, வேதனை” பேரவையில் முதல்வர் விஜய் உருக்கம்..!!

"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…

18 minutes ago

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விடமாட்டேன்” சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி…!!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…

32 minutes ago