“மகனையும், மருமகனையும் காப்பாற்ற இப்படியொரு நாடகம்” அதை மறைக்க எங்கள் மீது பழியா…? ஸ்டாலினையே நேருக்கு நேர் தாக்கிய மாணிக்கம் தாகூர்..!!

By Soundarya on ஆனி 7, 2026

Spread the love

தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை சுயபரிசோதனை செய்யாமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸைத் தாக்குமாறு தனது கட்சியினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்துவது வியப்பாக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். தனது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோரின் அரசியல் தவறுகளை மறைப்பதற்காகவே, திமுக தலைமை காங்கிரஸைப் பலிகடாவாக்க முயற்சிப்பதாக அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மக்களின் உண்மையான தீர்ப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் இதுபோன்ற தந்திரமான அரசியல் சில காலத்திற்கு உதவலாம், ஆனால் ஒருபோதும் உண்மையை முழுமையாக மறைக்க முடியாது என்று மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இத்தகைய காரசாரமான அறிக்கைகள், இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் விரிசலையும் அரசியல் மோதலையும் தற்பொழுது வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.