பெங்களுருவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சக்திவேல் என்ற 30 வயது நபர் நகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து அலி அஸ்கர் சாலையில் உள்ள தூதரக அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒரு பலா மரத்தில் ஏறியுள்ளார். அதாவது அவர் அங்கிருந்த மரத்தில் பலாப்பழங்களைப் பார்த்துவிட்டு, அதை திருடுவதற்காக கண் இமைக்கும் நேரத்தில் 30 அடி மரத்தில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அவர் மரத்தின் பாதியளவு உயரத்தில் ஏறியபோதுதான் ஒரு பாதுகாப்பு காவலர் அவரைக் கண்டு கீழே இறங்கும்படி கூறியுள்ளார்.
இதனால் பயத்தில் அவர் ஒரு மரக்கிளையில் சுமார் 5 நிமிடங்கள் தொங்கத் தொடங்கினார். இதனையடுத்து இதுகுறித்து காவல்துறை உதவி எண் 112க்கு அழைப்பு வந்தது. அருகிலுள்ள ஹொய்சாலா காவல்துறையினர் இரண்டு நிமிடங்களுக்குள் அங்கு விரைந்து சென்று அவர் சீராக தரையிறங்க உதவும் வகையில் பாதுகாப்பு வலையை விரைவாக தயார் செய்துள்ளார்கள். அதன்பின்னர் அந்த நபர் அந்த வலையில் குதித்துள்ளார். அப்போது தரையில் அடிபட்டு அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவர் பவுரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் ஆபத்தைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…