ரயிலில் திடீரென பேண்ட்டை கழட்டிய ஆசாமி… அலறிய பயணிகள்.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்.. அதிர்ச்சி வீடியோ வைரல்..!!

By Swetha on ஆனி 7, 2026

Spread the love

நிரம்பி வந்த ஒரு பொது பயணிகள் ரயிலில், நபர் ஒருவர் சக பயணிகள் முன்னிலையில் திடீரென தனது ஆடைகளைக் கழற்றி அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் அநாகரீகமான செயலால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர்.

சட்டத்தையும் காவல்துறையையும் எதிர்பார்த்து நேரத்தை வீணடிக்க விரும்பாத பயணிகள், உடனடியாக ஒன்று கூடி அந்த நபருக்கு தர்மஅடி கொடுக்கத் தொடங்கினர். சக பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த நபரை சரமாரியாகத் தாக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

   

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “ஆமாம், போலீசாருக்காகக் காத்திருக்க வேண்டாம்” என்று பொதுமக்களின் உடனடி நடவடிக்கையைச் ஆதரித்தும், பொது இடங்களில் இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இது தகுந்த பாடம் என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.