“ஜாமீனே வேண்டாம்”… இரண்டு ஆண்டுகள் சிறையில் தவம் கிடந்த இளைஞன்… டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்த அதிரடி கிளைமாக்ஸ்…!

By SATHISH R on ஆடி 5, 2026

Spread the love

எந்தவொரு குற்றமும் செய்யாமல், தவறான குற்றச்சாட்டுகளால் ஒருவரின் இரண்டு ஆண்டு கால வாழ்க்கை சிறைக்குள் முடங்கிப்போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்த 32 வயதான கார்த்திக் என்ற இளைஞர் மீது, கடந்த 2024-ஆம் ஆண்டு 17 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாகப் பொய்ப் புகார் அளிக்கப்பட்டது. தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கார்த்திக் காவல்துறையினரிடம் எவ்வளவோ எடுத்துரைத்தும், அதனை ஏற்க மறுத்த மேட்டூர் மகளிர் காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தச் சூழலில், தன் மீது சுமத்தப்பட்ட பொழிக் பழியைத் துடைத்தெறிய துணிச்சலான முடிவொன்றைக் கார்த்திக் எடுத்தார். ஜாமீனில் வெளியே வந்தால் தன் மீதான களங்கம் அப்படியே நிலைத்துவிடும் என்று கருதிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாமீன் கோராமல் சிறையிலேயே இருக்க முடிவு செய்தார். “நான் நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்” என்பதில் உறுதியாக இருந்த அவர், சிறைவாசத்தை சகித்துக்கொண்டு சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டார். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பிறந்த ஆண் குழந்தை, அச்சிறுமி மற்றும் கார்த்திக் ஆகிய மூவருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது.

   

ஆய்வக முடிவுகள் வெளியான போது, அந்தக் குழந்தைக்கும் கார்த்திக்கும் எவ்வித மரபணுத் தொடர்பும் இல்லை என்பதும், அவர் முற்றிலும் நிரபராதி என்பதும் அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிமன்றம் கார்த்திக்கைக் குற்றமற்றவர் என்று அறிவித்து வழக்கிலிருந்து விடுதலை செய்தது. “நீதி வென்றுவிட்டாலும், ஒரு நிரபராதியின் இரண்டு ஆண்டுகால இளமையும், உழைப்பும் காவல்துறையின் அவசரக் கைதால் வீணடிக்கப்பட்டதை யார் ஈடுசெய்வது?” என்ற கேள்வியுடன் இந்தச் சம்பவம் சமூகத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.