கணவனை பிரிந்த பெண்ணுக்கு வந்த நள்ளிரவு மெசேஜ்… நிர்வாண படம் கேட்டு மிரட்டிய 23 வயது இளைஞர்… சென்னையை அதிரவைத்த இன்ஸ்டாகிராம் மார்ஃபிங் கொடுமை….!

Spread the love

சென்னை போரூர் பகுதியில் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பெண்ணொருவரை ஆபாசமாக மிரட்டி, நிர்வாணப் படங்களைக் கேட்டுத் தொந்தரவு செய்த வாலிபரை சைபர் கிரைம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வரும் 35 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, மர்ம நபர் ஒருவர் ஆபாசமான குறுஞ்செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்பியுள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பிய அந்த நபர், பெண்ணின் நிர்வாணப் படங்களை அனுப்பவில்லை என்றால் அவற்றைச் சமூக வலைதளங்களிலும் அவர் வேலை செய்யும் இடத்திலும் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் விவரங்களைச் சேகரித்தனர். தொழில்நுட்ப ஆதாரங்களின் உதவியுடன், இந்த மிரட்டல் செயலில் ஈடுபட்டவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெரின் D சேகர் (23) என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட பெரின், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தெரிந்தால், அவர் அதனை மற்ற உறவினர்களிடம் கூறிவிடுவார் என்ற பயத்தில், அவரை முன்கூட்டியே மிரட்டிப் பணிய வைக்க பெரின் இந்த ஆபாச மிரட்டல் யுக்தியைக் கையாண்டது தெரியவந்தது. தற்போது பெரின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

5 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

5 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

5 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

5 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

5 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

5 மணத்தியாலங்கள் ago