அலுவலகப் பணிகள் முடிந்த பிறகு, ஒரு இளம் பெண் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலுவலகத்திற்கு வெளியே அமர்ந்து ஜூஸ் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் ஒருவர், அந்தப் பெண்ணைப் பார்த்து மிகவும் அநாகரீகமான முறையில் சைகை செய்து தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அந்தப் பெண் அதைக் கவனிக்காதது போல இருந்துள்ளார். ஆனால், அந்த நபரின் செயல் எல்லை மீறியதால், சாமர்த்தியமாகத் தனது அலைபேசியில் அந்த நபர் செய்த அசிங்கமான சைகைகளை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த வீடியோவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்தப் பெண், தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். “அந்தச் சமயத்தில் பயம் அல்லது தயக்கம் காரணமாக என்னால் உடனடியாக அந்த நபரை எதிர்த்துப் பேசவோ அல்லது தட்டிக்கேட்கவோ முடியவில்லை. ஆனால், இப்போது அதை நினைத்தால் எனக்கு மிகப்பெரிய வருத்தமாகவும், குற்ற உணர்ச்சியாகவும் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் பெண்கள் அமைதியாக இருக்கக் கூடாது என்றும், அந்த இடத்திலேயே உடனடியாகக் குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றும் அவர் மற்ற பெண்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். குற்றவாளிகள் பயமின்றி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்குப் பெண்களின் மௌனமே காரணமாகிவிடுகிறது என்பதை உணர்த்தும் விதமாக இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…