“ப்ளீஸ் விட்ருங்க…” மனைவியுடன் விறகு சேகரிக்க சென்ற நபர்… அடித்து உதைத்து அராஜகம் செய்த பாதுகாவலர்கள்… மனதை உலுக்கும் சம்பவம்…!!

By Devi Ramu on வைகாசி 4, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரோலியில் உள்ள நிலக்கரி சுரங்கப் பகுதியில், விறகு சேகரிக்கச் சென்ற பைகா பழங்குடியினத்தைச் சேர்ந்த அன்னே லால் பைகா என்பவர் தனியார் பாதுகாவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பின்தங்கிய பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர், தனது மனைவியுடன் சுரங்க வளாகத்திற்குள் நுழைந்தபோது திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் இரண்டு மாதங்களுக்கு முன்பே நடந்திருந்தாலும், தற்போது இதன் வீடியோ இணையத்தில் வைரலான பிறகே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் (SC/ST Act) வழக்குப் பதிவு செய்து, தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த சிலரைத் தடுப்புக்காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைக்கவும், அவருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பழங்குடியின மக்களின் பாதுகாப்பு குறித்த அரசியல் விவாதத்தை இந்தச் சம்பவம் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.