அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குமுழியம் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை மயானத்தில் தகனம் செய்யும் பணியில் தங்கராசு உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர். மறுநாள் காலை சிதையைச் சோதித்தபோது உடல் முழுமையாக எரியாததைக் கண்டு, உறவினர்கள் மீண்டும் தீ மூட்டியுள்ளனர். அதன் பின்னரே எரியூட்டும் பணியில் உதவிய தங்கராசுவைக் காணவில்லை என்பது தெரியவந்தது.
சந்தேகமடைந்த கிராம மக்கள் எரியூட்டப்பட்ட சிதையின் சாம்பலை விலக்கிப் பார்த்தபோது, அங்கு இரண்டு மண்டை ஓடுகள் இருந்ததைக் கண்டு உறைந்து போயினர். மதுபோதையில் இருந்த தங்கராசு, சடலத்தை எரிக்கும்போது நிலைதடுமாறி சிதைக்குள் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த விசித்திரமான மற்றும் சோகமான விபத்து குறித்து இரும்புலிகுறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள ஹாஜிநகரைச் சேர்ந்த கல்யாண் சிங் பால் என்ற முதியவர், தனது குடும்பத்தினரின் அலட்சியம்…
தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகை வியாபாரிகள் சம்மேளனம், நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை அதிரடியாக நீக்கினார்.…
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் புதன்கிழமை அன்று பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த இயற்கை சீற்றத்தின் போது,…
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட குடிநீர், சுகாதாரம், வருவாய் மற்றும் பொதுப்பணி உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்…