“எப்போதும் விளையாட்டு தான்….” கழுத்தை நெரித்த கடன்… உயிரை விட்ட 40 வயது நபர்… பெரும் சோகம்…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2025

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் பிரதீப் கைலாஷ் (40). இவர் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த பிரதீப் நண்பர்கள், உறவினர்கள் என தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.

அந்த பணத்தையும் இழந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் விசாரணை நடத்தியதில் மன உளைச்சலில் பிரதீப் தற்கொலை செய்து கொண்டது உறுதியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.