மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகரில் ஞாயிற்றுக்கிழமை 22 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ளக் கோரி 150 அடி உயர மொபைல் கோபுரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின்படி, இந்த சம்பவம் அசோக்நகர் மாவட்டத்தின் சந்தேரியின் பண்டாரி கிராமத்தில் நடந்துள்ளது. அந்த நபர் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பாமோர் காலாவில் வசிக்கும் சைலேந்திரா என அடையாளம் காணப்பட்டார்.
சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அவர் கோபுரத்தில் ஏறி கிட்டத்தட்ட 16 மணி நேரம் அங்கேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்ணை உடனடியாக அழைத்து வந்து திருமணம் செய்து வைக்காவிட்டால் கீழே இறங்க மாட்டேன் என்றுகூறியுள்ளார் . இரவு முழுவதும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அவரை கீழே இறங்கும்படி வற்புறுத்த முயன்றனர். இருப்பினும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் குதித்துவிடுவதாக சைலேந்திரா பலமுறை மிரட்டினார்.
#WATCH | Youth Climbs 150-Foot Tower In Ashoknagar, Demands Marriage With Girlfriend In MP's Ashoknagar #MPNews #MadhyaPradesh pic.twitter.com/oo13zdHJXu
— Free Press Madhya Pradesh (@FreePressMP) November 2, 2025
