ஈவு இரக்கமே இல்லையா..? தெருநாய் குட்டிகளை கொடூரமாக அடித்து கொன்ற நபர்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சியூட்டும் காட்சி..!!

By Soundarya on ஐப்பசி 6, 2025

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இரண்டு தெரு நாய்க்குட்டிகள் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது. ஜபல்பூரில் உள்ள ஜாக்ரிதி நகரில் நடந்த இந்த சம்பவமானது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளில், ஒரு நபர் விலங்குகளை இரக்கமின்றி   அடிப்பதைக் காட்டுகிறது. 

இந்த வீடியோ வெளியானதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி விலங்கு ஆர்வலர்கள் கோஹல்பூர் காவல் நிலையத்தை அணுகினர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தகவலின்படி, இந்த சம்பவம் அக்டோபர் 4 ஆம் தேதி அதிகாலை 1:30 மணியளவில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் குத்தல் சக்ரவர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், தெரு நாய்க்குட்டிகளின் குரைப்பால் அவர் தொந்தரவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.