மும்பையில் தாதரிலிருந்து போரிவலி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயிலில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டியில் பயணம் செய்த கேஜேடன் டெனிஸ் பிரைஸ் (64) என்ற மாற்றுத்திறனாளி முதியவர், ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு பரிதாபமாக கொல்லப்பட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த அம்ஜத் சாஃபுதீன் ஷேக் (48) என்பவரிடம், அந்த இருக்கையைக் காலி செய்யுமாறு பிரைஸ் கோரியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த அம்ஜத் ஷேக், ஒரு காலை இழந்த நிலையிலிருந்த பிரைஸை ரயிலில் இருந்து வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
மாஹிம் மற்றும் பாந்த்ரா நிலையங்களுக்கு இடையே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பிரைஸ், தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் அம்ஜத் சாஃபுதீன் ஷேக்கை உடனடியாகக் கைது செய்து, பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103-இன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையின் போது, தான் காகத்தை விரட்ட முயன்றபோது தற்செயலாக கை பட்டுவிட்டது என மாற்றிப் பேசிய போதிலும், சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் பொது மக்கள் அத்துமீறுவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில், அரசுப் பேருந்து மோதி ஹேமதுர்கா என்ற 26 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில்…
டெல்லியைச் சேர்ந்த மோகன் குமார் - காஜல் தம்பதியினர், தங்கள் 9 மாத ஆண் குழந்தையுடன் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில்…
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…