வினு சக்ரவர்த்தியை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அறைந்த மேக்கப் மேன்… அப்படி என்ன செய்தார் தெரியுமா?தமிழ் சினிமாவில் கதாசிரியராக, நடிகராக, தயாரிப்பாளராக பன்முகத் திறமையோடு இயங்கியவர்தான் வினு சக்ரவர்த்தி. மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் அரசுப் பணியில் வேலை செய்து வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதாசிரியராக சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.
அப்போது அங்கு உதவி இயக்குனராக பணியாற்றிய பாரதிராஜாவுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. புட்டண்ணா கனகலுடன் இவர் இணைந்து உருவாக்கிய கதையான பரசக்கே கண்ட தின்மா என்ற படம் தமிழில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று உருவாக்கப்பட்டது. அதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாசிரியராக அறிமுகமானார்.
அதன் பின்னர் நடிகரான இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தயாரித்த வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் தான் தென்னிந்தியாவைக் கலக்கிய சில்க் ஸ்மிதா அறிமுகமானார்.
நடிகராக பெரும்புள்ளி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வினு சக்ரவர்த்தி. அந்த படத்தின் இயக்குனர் விக்ரமன் காலை 7 மணிக்கு ஷூட்டிங் வந்துவிடுங்கள் எனக் கூறியபோது ஓகே என சொல்லிவிட்டு அடுத்த நாள் சரியான நேரத்துக்கு வராமல் தாமதப்படுத்தியுள்ளார்.
இது சம்மந்தமாக அந்த படத்துக்கு மேனேஜராக இருந்த நடிகர் பகவதி பெருமாள் சென்று கேட்டபோது “ஏன்டா என்ன எழுப்பி விடல” என மேக்கப் மேனை அடித்துள்ளார். இதனால் கடுப்பான அந்த மேக்கப் மேன் கோபத்தில் நாற்காலியை தூக்கியை வினு சக்ரவர்த்தியை அடிக்க ஆரம்பித்து விட்டாராம். மேலும் அவர் “நான் சிவாஜிக்கே மேக்கப் போட்டவன், நீ என்னடா கருவாயா… என்ன அடிக்குறது” என சரமாரியாக தாக்கிவிட்டாராம்.
ஒரு கட்டத்தில் பம்ம ஆரம்பித்த வினு சக்ர்வர்த்தி “டேய் அடிக்குறதுன்னா கதவ சாத்திட்டு அடிடா… யாராவது பாத்துட போறாங்க’ என கெஞ்சினாராம். இப்படி தான் மேனேஜராக இருந்த போது பல சுவாரஸ்யமான சம்பவங்களை பார்த்துள்ளதாக பகவதி பெருமாள் தெரிவித்துள்ளார்.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…