மத்திய அமைச்சரவை மாற்றம் குறித்த பா.ஜ.க-வின் முக்கியத் திட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், அதாவது அடுத்த மாதத்திற்குள் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் உ.பி. பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்களுக்கு அதிகளவில் அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்படும் மூத்த தலைவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்குவது குறித்தும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பதவியிலிருந்து விடுவிக்கப்படும் மூத்த தலைவர்கள் பல்வேறு மாநிலங்களின் கவர்னர்களாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக இந்தச் செய்தி தெரிவிக்கிறது.
