மகாநதி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை… இனி கங்காவாக தொடரப்போவது இவர்தான்…

By santhoshinikarthik on ஆவணி 8, 2024

Spread the love

விஜய் டிவியில் டிஆர்பி யில் முன்னணி வகித்து வரும் சீரியலில் ஒன்றுதான் மகாநதி. இந்த சீரியலை பிரவீன் பென்னட் என்பவர் இயற்றியுள்ளார் .இது நான்கு சகோதரிகளை கொண்டு உணர்வூட்டும் வகையில் அமைந்திருக்கும். இந்த சீரியலின் கதாநாயகி மூன்றாவது தங்கையான காவேரி ஆகும். மேலும் மகாநதி சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

   

மூத்த அக்காவாக கங்கா கதாபாத்திரத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனி நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ சிகிச்சை பெறும் புகைப்படங்களையும் வெளியிட்டு அதில் மகாநதி சீரியலில் மீண்டும் நான் நடிக்க போவதில்லை எனவும் கூறியிருக்கிறார் .

   

 

 

இந்நிலையில் அவருக்கு பதிலாக கங்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வேறு ஒரு நடிகையை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலையில் இருந்த இயக்குனர் தற்பொழுது இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான ஏற்ற நடிகை ஒருவரை தேர்வு செய்திருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை சன் டிவி தொலைக்காட்சியில் சிங்கப்பெண் சீரியலில் நடித்து வந்த தாரணி தான் .

இவர் நடித்துள்ள கங்கா கதாபாத்திரத்திற்கான  காட்சிகள் இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறியிருக்கின்றனர். மேலும் இவர் கங்கா கதாபாத்திரத்தை எவ்வாறு மக்களிடையே நிறைவடையச் செய்கிறார் என்று காணலாம்.