தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் சுமார் 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
அவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இப்படியான நிலையில் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி விடுபட்ட தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். விடுபட்டவர்களிடம் உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கூடுதல் பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதிதாக விண்ணப்பித்த குடும்ப தலைவிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…