ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை… மெசேஜ் வந்திருச்சா?… உடனே செக் பண்ணுங்க… தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 11, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்படாதவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக மீண்டும் விண்ணப்பித்து வந்தனர். இதில் கிட்டத்தட்ட 28 லட்சத்திற்கும் அதிகமான குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் இவர்களில் தகுதியான 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு டிசம்பர் 12 நாளை முதல் 1000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்து அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு அரசு சார்பில் மெசேஜ் அனுப்பப்பட்டு வருகிறது . விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தால் அதற்கான காரணம் மெசேஜில் தெரிவிக்கப்பட்டிருக்கும். அதன்படி குடும்பத் தலைவிகள் மேல்முறையீடு செய்யலாம்.