மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது வரும்?…. அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன ‘அந்த’ ரகசியம்… இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்….!

Spread the love

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகை எப்போது 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், விடுபட்ட தகுதியுள்ள குடும்பத்தலைவிகள் தங்களுக்கு உரிமைத் தொகை கோரி தொடர்ச்சியாக மனுக்களை அளித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் விரிவான விளக்கமளித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் ஒவ்வொரு துறையிலும் தற்போதைய செயல்பாடுகள் குறித்து தீவிர ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவிலேயே முதல் முறையாக ஐந்தாண்டு திட்டம் என்ற முறையில், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒவ்வொரு துறையும் அடுத்த 5 ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை வகுக்க வேண்டும் என்பது குறித்து திட்ட வடிவமாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போதைய விஜய்யின் ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலமாகத் திகழ்கிறது என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

மகளிர் உரிமைத் தொகைக்காக பெண்கள் நேரடியாகவும் ஆன்லைன் வழியாகவும் தொடர்ச்சியாக விண்ணப்பித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், விண்ணப்பங்களைப் பெறும் பணிகள் எங்கும் நிறுத்தப்படவில்லை என்றும், அவை தொடர்ந்து பெற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் தெளிவுபடுத்தினார். ஆன்லைன் மூலம் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றும், பெறப்படும் மனுக்களை அரசு முறையாகப் பரிசீலித்து, தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார். மேலும், மனுக்கள் வாங்கிய உடனேயே நிதியாதாரங்களைக் கணக்கில் கொண்டுதான் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இதற்கு சற்றே கால அவகாசம் தேவைப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆட்சியில் மாதம் 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த இந்த உரிமைத் தொகையை, தவெக தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்குவது குறித்த எதிர்பார்ப்பு மகளிர் மத்தியில் பெருமளவில் எழுந்துள்ளது. வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரின் போது மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் விடுபட்டவர்களுக்கான புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

மரணத்தின் விளிம்பில் போராட்டம்…! 500 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை சுற்றுலாப் பயணி… கொழுக்குமலை டிரெக்கிங்கில் கொடூர விபத்து…!!

கொழுக்குமலைப் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கார்த்திக்(31) என்பவர், எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து சுமார் 500…

3 minutes ago

திடீரென முடக்கப்பட்ட மெரினா…. அலர்ட்டான போலீஸ்…. பொதுமக்கள் உள்ளே செல்லத் தடை… சென்னையில் உச்சகட்ட பரபரப்பு….!

சென்னை மெரினா கடற்கரையில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் திரளக் கூடும் என்ற ரகசியத் தகவலின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப்…

6 minutes ago

“2 வருடங்களில் CM… அடுத்தது PM?”…. திமுக, அதிமுகவுக்கு ஷாக்… 2029 பிரதமர் ரேஸில் விஜய்?…. காங்கிரஸை அலறவிடும் தவெக கணக்கு….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்துவந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியை உடைத்து, புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல்களும்…

11 minutes ago

திமுகவை விட்டு வந்ததே தப்பா போச்சு?… குரலை இழந்த காங்கிரஸ், விசிக – தவெக கூட்டணியில் நடப்பது என்ன?…. அதிர்ச்சியில் தமிழக அரசியல் களம்…!

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், தன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தகுந்த முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் வழங்கி, அவர்களைத் தேசிய மற்றும் மாநில…

19 minutes ago

நள்ளிரவில் மர்மம்…! தாயின் சடலத்தை தோண்டி எடுத்து கடத்திய மகன்கள்… நடந்தது என்ன…? கர்நாடகாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூர் பகுதியைச் சேர்ந்த ஈரம்மா (58) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்த நிலையில்,…

21 minutes ago

“அப்பா கொஞ்சம் பேசாம இருங்க”…. வைகோவுக்கு துரை வைகோ போட்ட திடீர் கண்டிஷன்… விஜய் கொடுத்த மிகப்பெரிய அதிர்ச்சி… பின்னணியில் பரபரப்பு உண்மை…!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அண்மைக்காலப் பேச்சுகள், அவர் அங்கம் வகிக்கும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.…

26 minutes ago