தமிழக அரசின் மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை 2,500 ரூபாயாக உயர்த்துவது குறித்த மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை இந்த ஆடி மாதத்தில் வெளியிட முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிறந்த வீட்டு ஆடி சீதனமாக இந்த உயர்வு அமையவுள்ளதால் ஒட்டுமொத்தப் பெண்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். வரும் ஜூலை 16-ஆம் தேதி ஆடிப் பிறப்பை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகுமா அல்லது ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரவிருக்கும் ஆடிப் பெருக்கு நன்னாளில் இதற்கான அரசாணை வெளியிடப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.
