Connect with us

அந்தப் பெண்மணியை நினைத்து எழுதியது தான் ‘நீ நான் நாம்’ பாடல்.. சுவாரசியத்தை பகிர்ந்த பாடலாசிரியர் உமாதேவி..

CINEMA

அந்தப் பெண்மணியை நினைத்து எழுதியது தான் ‘நீ நான் நாம்’ பாடல்.. சுவாரசியத்தை பகிர்ந்த பாடலாசிரியர் உமாதேவி..

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் வரும் பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் புதுமையாகவும் இருக்கும், கேட்கும் ஒவ்வொரு பாடலும் புத்துணர்ச்சியாகவும் நமக்கு தோன்றும். அத்தகையில் அந்தப் படத்தில் வரும் காட்சிக்கு ஏற்றவாறு அப்பாடல்கள் ஒவ்வொன்றும் அமைந்திருக்கும் அதில் சில பாடல்கள் அக்கதையில் கூற வரும் அனைத்தையும் வெறும் மூன்று நிமிடத்தில் அப்பாடல் கூறிவிடும். அவ்வளவு கேட்பதற்கு அந்த பாடல் கருத்துக்களை ஒளிந்து வைத்து இருக்கும், அப்படி இருக்கையில் நான் நீ என்ற பாடல் கேட்பதற்கு மிகவும் புதுமையாகவும் அதில் இருக்கும் ஒவ்வொரு வரியும் தனித்துவமான கருத்துக்களை வெளிப்படுத்தும்,

#image_title

அப்பாடல் எழுதிய உமாதேவி அவர்கள் ஒரு இன்டர்வியூவில். இந்தப் பிரத்தேகமான வரி, ” உயிர் வாழ முள் கூட பறவை வீடாய் ஆகிறது” எப்படி மேம் இத எழுதுனீங்கன்னு ஆங்கர் கேட்டதுக்கு,

   

அதுக்கு உமாதேவி அவர்கள் இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் கேட்டதற்காக மட்டுமல்ல இதை யார் கேட்டு இருந்தாலும், ஏன் நீங்கள் கேட்டா கூட, நான் எதைப் பார்த்து வளர்ந்தேனோ என் கண்ணில் பட்டவை, நான் பார்த்த காதல், என் அம்மா அப்பாவை பார்த்த காதல், என்னை சுற்றியுள்ள காதல், என் அக்கா பண்ண காதல், எங்க அண்ணன், என்ன சுத்தி இருக்கிற அனைத்து காதலும், நான் பார்த்த மலையோட நினைவு தான் எனக்குள் இருக்கும் நீங்க பார்த்த மழையோட நினைவு தான் உங்களுக்குள் இருக்கும் ஏன் ஒரு குழந்தை எந்த மாதிரி பாத்துச்சோ அதோட நினைவுக்குள்ளயும் அதை பார்த்த விஷயம் மட்டும் தான் இருக்கும், அது போல தான் இயக்குனர் பா ரஞ்சித் என்கிட்ட கேட்டப்போ நான் படிச்ச எனக்குள்ள இருந்த எல்லா விஷயமும் அப்ப வெளியில் வந்தது,

 

#image_title

ஒரு உதாரணத்துக்கு அதிகமானுக்கும் தொண்டைமானுக்கும் இருக்கிற போர் இருக்குல்ல நம்ம போற சும்மா வாய் வார்த்தை சொல்லிடுவோம் ஆனா அந்த போர்ல எவ்வளவு உயிர் சேதங்கள் ஆயிருக்கும், ஆனா அந்தப் போற ஒருத்தி வெறும் வாய் சொல்லல நிறுத்தி இருக்கா, அந்த ஒருத்தி தான் அவ்வையார். நான் அவ்வையாரை நினைச்சு தான் அந்த பாட்டு எழுதினேன், பா ரஞ்சித் அந்தக் கதையில அந்த ஹீரோயினோட சிச்சுவேஷன் சொல்லும்போது எனக்கு அவ்வையாரோட நினைப்பு தான் வந்தது, அந்த ஹீரோயினா அவ்வையாரோட இடத்துல வச்சு தான் அந்த பாட்டியை எழுதினேன்.
அந்தப் பாட்டில் உள்ள அழகு வடிவமைப்புக்கு அவ்வையார் தான் தான் காரணமாம்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top