“அவ எனக்கு வேண்டவே வேண்டாம்” என் மனைவி தினமும் போனில் வீடியோ பார்த்து… விவாகரத்து கேட்ட கணவன்… மெட்ராஸ் ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

Spread the love

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் கணவன் ஒருவர் தனது மனைவியின் தனிப்பட்ட பழக்கத்தைக் காரணம் காட்டி விவாகரத்து கோரிய வினோதமான வழக்கு ஒன்று அண்மையில் விசாரணைக்கு வந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு இது இரண்டாவது திருமணமாகும். கடந்த 2020 டிசம்பர் முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது மனைவி மொபைலில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துவிட்டு சுயஇன்பம் காண்பதாகவும், எனவே இந்த பெண்ணிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும் கணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் ஆர்.பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு, கணவனின் விவாகரத்து கோரிக்கையை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. மனைவி தனிப்பட்ட முறையில் வீடியோ பார்ப்பதோ அல்லது சுயஇன்பம் காண்பதோ கணவருக்கு இழைக்கப்படும் கொடுமையாகக் கருத முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தினர். மேலும், ஆண்கள் சுயஇன்பம் காண்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்போது, பெண்களின் விஷயத்தில் மட்டும் அதனைத் தவறான ஒன்றாகப் பார்க்க முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இது முற்றிலும் ஒரு நபரின் தனிப்பட்ட நடத்தை என்றும், இதில் ஈடுபடுமாறு கணவரை அவர் எவ்விதத்திலும் வற்புறுத்தவில்லை என்பதால், இதனை விவாகரத்துக்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. ஒருவேளை, மனைவி தனது கணவரையும் இதில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தியிருந்தாலோ அல்லது இதனால் அவர்களது திருமண வாழ்க்கைக்கான கடமைகள் பாதிக்கப்பட்டிருந்தாலோ இந்த விவகாரம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும், தற்போதைய சூழலில் இதில் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Soundarya

Recent Posts

“மனைவி ஆசையை விட தங்கம் பெருசா?”…. ரூ.1.65 லட்சம் ஐபோன் பரிசளித்து அசத்திய கணவரின் நெகிழ்ச்சி சம்பவம்…..!

மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…

50 minutes ago

ஸ்பாவில் சிக்கிய 5 பெண்கள்… செல்போனை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கேரளாவை உலுக்கும் ரகசிய நெட்வொர்க்….!

கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…

1 மணத்தியாலம் ago

டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி….. 200 கடைகளுக்கு பூட்டு போடப்போகும் விஜய் அரசு… அலறும் அதிகாரிகள்…. சற்றுமுன் பறந்த உத்தரவு…!

தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…

1 மணத்தியாலம் ago

“தோற்றால் தற்கொலை பண்ணிப்பேன்னு ஸ்டாலின்கிட்ட அழுதாரா துரை வைகோ?”…. வல்லம் பஷீர் கிளப்பிய புது வெடி….!

திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…

1 மணத்தியாலம் ago

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

1 மணத்தியாலம் ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

2 மணத்தியாலங்கள் ago