தஞ்சாவூரில் காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பான திமுக ஆர்ப்பாட்டத்தில், நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை இன்றிரவுக்குள் விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு நடிகையின் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும், அரசியல் ஆதாயத்திற்காகவே அவரது பேச்சு எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுவதாகவும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், குறித்த நடிகையை தவெக தலைவர் விஜய் தனது கட்சியில் இணைத்து முன்னிலைப்படுத்துவதற்காகவே இத்தகைய நாடகம் நடத்தப்படுவதாக மூன்று முக்கிய காட்சிகளுடன் அவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அப்துல்லாவின் இந்த பதிவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் விஜய் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கையிலிருந்தும், உண்மையான சர்ச்சையிலிருந்தும் மக்களின் கவனத்தை திசைதிருப்பவே திமுகவினர் இதுபோன்ற கற்பனைக் கதைகளைப் பரப்பி வருவதாக தவெக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டியைச் சேர்ந்த 23 வயது இளைஞரான சங்கர், கடந்த சில தினங்களுக்கு முன்பு…
கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, தமிழக முதல்வர் விஜய்யை "நம்பர் ஒன் ஓடுகாலி முதல்வர்" என உதயநிதி…
தஞ்சாவூரில் தான் பேசிய பேச்சு விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகவும், அந்த கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே தன் மீது இந்த வழக்கு…
கோவை ரத்தினபுரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில், பெண் ஒருவர் திடீரெனத் தரையில் விழுந்து தனக்குக்…
டெல்லியில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.…
அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவை தொடரில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கக் கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு இவ்வாறு பேசினாரா என்ற…