“காச நோயால் வாடும் கணவன்.. கதறிய 30 வயது பெண்.. 3 பெண் பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கதி… ஓடும் பேருந்துக்குள் வேட்டையாடிய காமக்கொடூரர்கள்… டெல்லியில் மீண்டும் ஒரு ‘நிர்பயா’ கொடூரம்…!!!

Spread the love

தலைநகர் டெல்லியில், ஓடும் சொகுசுப் பேருந்தில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 12-ஆம் தேதி இரவு, படுக்கை வசதி கொண்ட (Sleeper Bus) தனியார் பேருந்தில் பயணம் செய்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து ஊழியர்களே பாதுகாப்பு அளிக்க வேண்டிய இடத்தில் இத்தகைய அராஜகத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்த அந்த காம கொடூரர்கள், அவரை ரத்த வெள்ளத்தில் பேருந்துக்கு வெளியே வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். உயிருக்குத் துடித்த நிலையில் அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லி போலீசார் வியாழக்கிழமை (மே 14, 2026) வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனையில் அந்தப் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக முயன்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநரை போலீசார் அதிரடியாகக் கைது செய்ததோடு, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்தத் துயரத்தின் நடுவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வறுமை நிலை அங்கிருந்த அதிகாரிகளைக் கலங்கச் செய்தது. பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், “எனது கணவர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்; எனக்கு 8, 6, 4 வயதில் மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நான் மருத்துவமனையில் இருந்தால் அவர்களுக்கு யார் உணவளிப்பார்கள்? யார் கவனிப்பார்கள்?” என்று கண்ணீருடன் கேட்ட அந்தப் பெண், மருத்துவமனையில் தங்க மறுத்து வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வருகிறார். தனது வலியையும் தாண்டி பிள்ளைகளின் பசிக்காக அவர் காட்டிய உறுதி நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.

டெல்லியில் கடந்த காலங்களில் நடந்த ‘நிர்பயா’ பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய நிலையில், மீண்டும் அதே போன்று ஓடும் பேருந்தில் ஒரு பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டெல்லி போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“தயவுசெய்து உள்ளே விடுங்க…” விம்பிள்டன் மேடையில் அழுத உலக நம்பர் 1 வீராங்கனை… டென்னிஸ் அரங்கில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்… மனதை உலுக்கும் வைரல் வீடியோ…!

விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…

28 minutes ago

ப்ளீஸ் என்ன விட்ருங்க… “திருமணமான பெண்ணை நிர்வாணப்படுத்தி… செருப்பு மாலை அணிய வைத்து” உறவினர்கள் செய்த உச்சகட்ட கொடூரம்…!

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

40 minutes ago

“பார்த்திபனுக்கு வந்த அந்த ஒரு கேவலமான மெசேஜ்”… கடுப்பான ராதிகா… பாக்கியராஜ் இறுதி சடங்கில் நடந்தது என்ன?… உண்மையை உடைத்த தனஞ்செயன்…!

சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…

45 minutes ago

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

1 மணத்தியாலம் ago