“வேறொருவருடன் பேசுகிறாரா?”… கள்ளக்காதலியை சந்தேகப்பட்ட காதலன்… கடைசியில் நேர்ந்த விபரீதம்… 10 வயது சிறுவன் கொலை… ஓமலூரை உலுக்கிய கோரச் சம்பவம்…!!!

Spread the love

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற பெண், தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில் ஓமலூரில் உள்ள ஒரு தனியார் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். அங்கு மேலாளராக பணியாற்றிய சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சத்யா அவரிடம் சரியாக பேசாததால், சத்யாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கலாம் என சக்திவேல் சந்தேகமடைந்து ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் நீண்ட நேரம் கதவைத் திறக்காததால் ஆத்திரமடைந்தார். கதவைத் திறந்தவுடன் வீட்டிற்குள் புகுந்த சக்திவேல், மின்விளக்கை அணைத்துவிட்டு சத்யாவையும் அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் சத்யாவின் மணிக்கட்டு துண்டானது. படுகாயமடைந்த இருவரும் அலறியபடி உதவி கோரவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள், கழுத்து மற்றும் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கரம் துண்டான நிலையில் உயிருக்கு போராடிய சத்யா, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஓமலூர் போலீசார், தப்பியோடிய சக்திவேலை தீவிரமாகத் தேடி வந்தனர்.

போலீசார் தேடி வந்த நிலையில், கருப்பூர் அருகே உள்ள கோரிமேடு காட்டுப்பகுதியில் சக்திவேல் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேலுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுடனான இந்த பழக்கத்தால் அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தது விசாரணையில் உறுதியானது. கள்ளக்காதல் சந்தேகத்தால் சிறுவன் கொல்லப்பட்டு, கொலையாளியும் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

26 seconds ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

3 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

9 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

13 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

16 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

20 minutes ago