கிரேட்டர்வின் தாத்ரி பகுதியில் உள்ள ஈஸ்டர்ன் பெரிஃபரல் எக்ஸ்பிரஸ்வேயில் பிராந்திய போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்புவதற்காக, அதிக பாரம் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர்கள் சிலர் தங்களது லாரிகளில் இருந்த பெரிய அளவிலான பாறாங்கற்களை நடுரோட்டிலேயே கொட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதிவேகமாக வாகனங்கள் செல்லும் இந்த எக்ஸ்பிரஸ்வேயில் திடீரென பாறைகள் கொட்டப்பட்டதால், அந்த வழியே வந்த பல வாகனங்கள் பாறைகளின் மீது ஏறி விபத்துக்குள்ளாகின. இதில் டஜன் கணக்கான வாகனங்களின் டயர்கள் வெடித்து பஞ்சராகின. இதனால் கொளுத்தும் வெயிலில் பயணிகள் பல மணி நேரம் நடுரோட்டில் தவித்து நின்றனர், மேலும் நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலையில் கிடந்த பாறைகளை உடனடியாக அகற்றினர். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ பஞ்சர் ஒட்டும் இயந்திரங்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த ஆபத்தான செயலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…