தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன மாநகரம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, லிட்டர் சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக விஜயை வைத்து லோகேஷ் லியோ திரைப்படம் ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் சூட்டிங் சென்னை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் கானும் லோகேஷன் சமீபத்தில் சந்தித்துள்ளனர். லோகேஷ் இயக்கத்தில் அமீர்கான் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே ராஜ்கமல் நிறுவனத்திற்கு லோகேஷ் ஒரு படத்தை இயக்க உள்ளார். அந்த படத்திற்கு விக்ரம் ரிட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எனவே தனது கமிட்மெண்டை முடித்துவிட்டு உங்களை வைத்து படம் இயக்குகிறேன் என லோகேஷ் கூறியதாக தெரிகிறது மேலும் பாலிவுட் படம் என்பதால் 50 கோடி ரூபாய் சம்பளம், லாபத்தில் பங்கு என இப்பவே பேசி முடித்து விட்டாராம் லோகேஷ். ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அட்லியும் சம்பளம், லாபத்தில் பங்கு என ஏற்கனவே கண்டிஷன் போட்டது குறிப்பிடத்தக்கதாகும். இப்போது லோகேஷ் கனகராஜும் அட்லீ ஃபார்முலாவை அப்படியே பின்பற்றுகிறார்.

#image_title
