வாகன ஓட்டிகளே ரெடியா?… செப்டம்பர் 13 அனைவருக்கும் 50% தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 9, 2025

Spread the love

தேசிய லோக் அதாலக் செப்டம்பர் 13 அன்று நடைபெறும். அப்போது நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி பெறலாம் அல்லது 50 சதவீதம் வரை குறைக்கலாம். லோக் அதாலக் சிறிய முதல் பெரிய அபராதங்களை குறைந்த செலவில் தீர்ப்பதற்கு அல்லது அவற்றை ரத்து செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது.

ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காதது, சீட் பெல்ட் அணியாதது, தவறாக வழங்கப்பட்ட சலான், பியூசி சான்றிதழ் இல்லாதது, நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்துதல், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன தகுதி சான்றிதழ் வைத்திருக்காதது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது என இந்த விதிமீறல்களுக்கு சலுகை பெறலாம். அதற்கு National legal services authority இன் இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.