ஈரான் – அமெரிக்கப் போர் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்க, உணவகம் மற்றும் சிறுதொழில் நடத்தும் பெண்களுக்குத் தமிழக அரசு ‘TWEES’ திட்டத்தின் கீழ் ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் மின்சார அடுப்புகள் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கிக்கொள்ளலாம் என்பதோடு, கடனில் 25 சதவீதம் (அதிகபட்சம் ₹2 லட்சம்) வரை மானியமும் வழங்கப்படுகிறது. 18 முதல் 55 வயதுக்குட்பட்ட தமிழகப் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்குத் தனியாகக் கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த சிறுதொழில்களைத் தொடங்க அல்லது விரிவுபடுத்த இக்கடன் வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெற முடியும் என்ற நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் விதவைகளுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தகுதியுள்ள பெண்கள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாவட்டத் தொழில் மையங்களை அணுகியோ விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…