ரூ.5 லட்சம் வரை கடனுதவி… விவசாயிகள் சொந்த நிலமாக விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவி…!

Spread the love

ஏழை எளிய விவசாய கூலிகளாக இருப்பவர்களை, நில உடைமைதாரர்களாக மாற்ற “நன்னிலம் திட்டம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட நலத்துறையின் தாட்கோ நிறுவனம் மூலம், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஆதிதிராவிட பெண்கள், பெண்கள் இல்லாத குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் இணைவோர்க்கு, அதிகபட்சம் 5 லட்சம் கடனுதவி வழங்குவதுடன், வட்டி மானியமும் கொடுக்கப்படும்.

 தகுதிகள்:

  • 18 – 55 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்
  • ஆண்டு  வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  • விவசாயக் கூலி வேலை செய்பவராகவோ, விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்
  • தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது
  • நிலம் விற்பவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் அல்லாத பிற இனைத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்
  • வாங்க நினைக்கும் நிலத்தை விண்ணப்பதாரே தேர்வு செய்ய வேண்டும்
  • நிலமற்றவர்கள் அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
  • நிலத்தினை 20 வருடங்களுக்கு விற்பனை செய்யதவாறு வில்லங்கம் ஏற்படுத்த வேண்டும்
  • நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது

அரசு கொடுக்கும் சலுகைகள்:

  • நிலவளத்தை மேம்படுத்தல்
  • ஆழ்குழாய் கிணறு
  • திறந்த வெளி கிணறு
  • பம்ப் செட் அமைத்தல்
  • குழாய் அமைத்தல்
  • சொட்டு நீர் பாசனம்
  • சுழல்முறை நீர்ப்பாசனம் அமைத்தல்

போன்றவற்றிக்கு மானியம் வழங்கப்படும்.

மின் இணைப்பு திட்டம் :

முன்னுரிமை அடிப்படையில் தகுதியுடைய விண்ணப்பதாரர் ஒருவருக்கு ரூ, 75,000/- வைப்புத் தொகை செலுத்தி, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு பெற்றுத்தந்திட இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிலப் பதிவு :

  • விண்ணப்பதாரருக்கு சொந்தமாக இருப்பதுடன் அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும்
  • நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
  • மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்

எங்கு விண்ணப்பிப்பது?

  • தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாட்கோ அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்
  • https://tahdco.com/ என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
Srimathi

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

14 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

28 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

32 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

36 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

40 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

43 minutes ago