தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் லிவிங்ஸ்டன் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், விஜயகாந்த் சாருடன் ஒரு படத்தில் நடிக்கும் போது எனக்கு அட்வான்ஸ் கொடுத்தாங்க. அப்போது விஜயகாந்த் சார் 5 லட்சம் ரூபாய் பணத்தை என்கிட்ட கொடுத்தார். உடனே நான், சார் இந்த பணத்தை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுங்க என்று கூறியதும் அவர் ஏன் என்று கேட்டார். இல்ல சார் எங்க அம்மா கிட்ட லட்ச லட்சமா நான் சம்பாதிப்பேன் என்று கூறியிருக்கிறேன் இதை 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொண்டு சென்றால் நிறைய நோட்டுக்களாக தோன்றும் என்று கூறியதும் விஜயகாந்த் சார் விழுந்து விழுந்து சிரிச்சாரு.
பிறகு அங்கிருந்த தனது அசிஸ்டனிடம் கூறி வங்கிக்குச் சென்று 100 ரூபாய் நோட்டுகளாக மாற்றி வர கூறினார். அவர் மாற்றி வந்ததும் சும்மா அரை மூட்டைக்கு அவ்வளவு பணம் இருந்துச்சு. அத கொண்டுட்டு போய் எங்க அம்மா கிட்ட கொடுத்து நான் லட்ச லட்சமா சம்பாதிச்சுட்டேன் இந்த பணத்தை வைத்து நான் கார் வாங்க போறேன் இது வெறும் அட்வான்ஸ் மட்டும் தான் என்று கூறி அவங்க மேல அந்த பணத்தை கொட்டுன. எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு என்று லிவிங்ஸ்டன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…